நாளொன்றுக்கு ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் ஆப்பிள் பழங்களில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் அவற்றை தினமும் உண்டு வந்தால் நம்முடைய உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் வருவதைத் தடுப்பதற்கு ஆப்பிளில் நிறைய சத்துக்கள் இருப்பதால் ஆப்பிளை சாப்பிட்டால் நோய் வருவதை தடுக்கலாம். அதற்குதான் நோயாளிகளை பார்க்கும் போது ஆப்பிளை வாங்கி கொண்டு போங்கள் என்று அனைவரும் சொல்கின்றனர். ஆப்பிளில் வைட்டமின் சி உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்கள் ஆப்பிள் பழத்தில் இருப்பதால் அதனை ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என்று தொடர்ந்து உண்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. ஆப்பிளில் எலாஸ்டின் மற்றும் கொலாஜன் இருக்கிறது, அவை நம்முடைய சருமத்தை மிகவும் பொலிவாகவும் மற்றும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது ஆப்பிளில் இருக்கும் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் செல்கள் அழிவதைத் அடுத்து முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறத...
மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...